பதற்றமடைந்து ஓடும் ஜெர்மனி வேந்தர் ! வைரலாகும் வீடியோ

German Chancellor Angela Merkel was recently seen panicking after she forgot to wear her face mask during a parliament session.

ஜெர்மனி நாட்டின்  வேந்தர் ஏஞ்சலா மேர்க்கெல்  நாடாளுமன்ற கூட்டத்தின்போது முகக் கவசம் அணிய மறந்ததால் பதற்றமடைந்து ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவிய கொரோனா காரணமாக முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது.மேலும் கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இதன்படி உலக நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஜெர்மனியில் தற்போது இரண்டாவது அலை  பரவி வருகிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெர்மனியில்  நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அந்நாட்டின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்க்கெல்  கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசிவிட்டு தனது இருக்கைக்கு சென்றுள்ளார்.ஆனால் அவர் பேசிய இடத்தில் தனது முகக்கவசத்தை மறந்து வைத்து  வந்துவிட்டார்.இதன் பின் தனது இருக்கையில் அதை தேடி பார்த்து ,பின் தான் பேசிய இடத்திற்கு பதற்றத்துடன் வந்து முகக்கவசத்தை எடுத்து அணிந்துகொண்டார்.இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது .

unknown node