#ElectionBreaking: கொ.ம.தே.க. தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.!

The agreement was signed for the 3 constituencies to be contested in the DMK alliance-led elections.

திமுக கூட்டணி தலைமையிலான தேர்தலில் போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் யாருக்கு வழங்குவது என்பதை குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஏற்கனவே சட்டப்பேரவையில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.

இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், திமுக கூட்டணி தலைமையிலான தேர்தலில் போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான ஒப்பந்த கையெழுத்திடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

அதன்படி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.