#BREAKING: தேர்தல் ஏற்பாடு.. நாளை ஆலோசனை..!

Chief Electoral Officer Satyaprada Sagu will hold a video conference tomorrow with all district election officials on the preparations for the Assembly elections.

சட்டப்பேரவை தேர்தல் முன்ஏற்பாடு குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நாளை காணொலி மூலம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு முறையை செயல்படுத்த தொகுதிக்கு 12 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதற்கட்ட சோதனை முடிவடைந்தது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.