பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்- ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால்

பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி

பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று பாமகநிறுவனர் ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.அதில்,பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும்வெற்றிமாறன் &வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்தார்.

unknown node

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாசு  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.அவரது பதிவில்,பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என்று தெரிவித்தார்.

unknown node

தற்போது இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில் ,மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று பதிவிட்டுள்ளார்.

பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்- ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால்