நாளை தொகுதிப் பங்கீடு பற்றி பேச வருமாறு காங்கிரஸ் க்கு திமுக மீண்டும் அழைப்பு

DMK again calls on Congress to come and talk about block allocation

தொகுதிப் பங்கீடு குறித்து பேச நாளை மீண்டும் வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இதில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு கட்சிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கி வருகிறது.

திமுக கூட்டணியில் ஏற்கனவே இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி பங்கீடு இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் உள்ளது.

இதனை அடுத்து திமுக காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நாளை வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.காங்கிரஸ் மற்றும்  திமுகவுக்கு இடையேயான தொகுதிப்பங்கீடு நாளை முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.