அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு.!

A different verdict has been given in the embezzlement case against Tamil Nadu Dairy Minister Rajendra Balaji.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறவில்லை.

இதனைத்தொடர்ந்து மகேந்திரன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தார். இதனை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணையின்போது நீதிபதி சத்தியநாராயணா வழக்குப்பதிவு செய்யவும், நீதிபதி ஹேமலதா வழக்கை தள்ளுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பால் 3-வது நீதிபதி விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.