அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஒபாமா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா நேர்மறை சோதனை

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஒபாமா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா நேர்மறை சோதனை செய்ததாகவும்,தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக பெரிய அளவிலான பாதிப்பு இல்லை எனவும்,தற்போது நலமாக உள்ளதாகவும் ஒபமா தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

“எனக்கு இரண்டு நாட்களாக தொண்டையில் வலி இருந்தது.நான் கொரோனாநேர்மறை சோதனை செய்தேன்.ஆனால்,தற்போது நன்றாக இருக்கிறேன்.மிச்செலேவும் நானும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,மேலும் அவரது சோதனையில் கொரோனா எதிர்மறையாக இருந்தது.

நோய்த்தொற்றுகள் குறைந்தாலும், நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால்,தடுப்பூசி போட வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது”,என்று தெரிவித்துள்ளார்.

unknown node

மேலும்,அமெரிக்காவில் கடந்த வாரத்தில் சராசரியாக சுமார் 35,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றுகள் இருந்ததை முன்னிட்டு,கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு ஒபாமா அதிக அமெரிக்கர்களை ஊக்குவித்தார்.

இதனிடையேஅமெரிக்காவில் 75.2% பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகவும்,முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் 47.7% பேர் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா!