தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

The Central Ministry of Health has reported an increase in corona infections in some districts of Tamil Nadu.

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும் கூறியுள்ளனர். இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 3,211 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,10,059 ஆக அதிகரித்துள்ளது.