பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என முதல்வர் ட்வீட்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ‘பரம்பிக்குளம்ஆழியாறுபாசனத் திட்ட நாள் விழாவில்’, இந்ததிட்டம்தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்த தலைவர்களின் திருவுருவ படங்களுக்கு அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீர்வளம் – நீர்மேலாண்மை – அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினர் பெறும் வகையில்பரம்பிக்குளம்ஆழியாறுதிட்டம்தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்! திட்டத்தை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மூத்தோரை நினைவு கூர்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.
unknown node