வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் கனமழையினால் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கன மழையின் காரணமாக வேலூர் மாவட்டம். பேரணாம்பட்டு, மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, நான்கு குழந்தைகளும், ஐந்து பெண்களும் உயிரிழந்த செய்தி உயிரிழந்தவர்களின் கேட்டு குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தம் அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
unknown node