#BigBreaking:கொரோனா கட்டுப்பாடுகள் நவ.30 வரை நீட்டிப்பு -முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Chief Minister Stalin has ordered to extend the corona restrictions in Tamil Nadu till November 30.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவ.30 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவ.30 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் வருகின்ற நவ.15 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,வடகிழக்கு பருவமழை, மழை,வெள்ள காலங்களில் டெங்கு பரவ வாய்ப்புள்ளதாலும், பொதுமக்களின் நலன் கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனினும்,ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி,கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்

மேலும்,கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.