#BREAKING: செப்.1 முதல் 9 TO 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பா?- தமிழக அரசு அறிவிப்பு

The Tamil Nadu government has announced that it intends to open the first schools in Tamil Nadu from September 1.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 9ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது 9ம் தேதி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்டுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ல் லிருந்து, 9 முதல் 12-ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக்கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மருத்துவ கல்லூரிகள், செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16 முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

unknown node