கண் அறுவை சிகிச்சைக்காக பீகார் முதல்வர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Bihar Chief Minister Nitish Kumar has been admitted to Delhi Aims Hospital for eye surgery.

கண் அறுவை சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் இன்று டெல்லி சென்றுள்ளார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது கண் சிகிச்சைக்காக மட்டுமே டெல்லி வந்ததாகவும், இந்த வருகையின்போது பிரதமர் சந்திப்பு குறித்து எந்த திட்டமும் தங்களிடம் இல்லை எனவும் கூறியுள்ளார். தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு வியாழக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப் படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் குறைந்தது அவர் மூன்று நாட்களாவது டெல்லியில் முதல்வர் நிதிஷ் குமார் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறுவை சிகிச்சை ஏற்கனவே செய்யப்பட்டிருக்க வேண்டியதம், கொரோனா பரவல் காரணமாகத்தான் இந்த அறுவை சிகிச்சை செய்ய தாமதமாகி விட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.