பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது அறிவிப்பு!

Bhutan announces the highest award for PM Modi!

பூடான் நாட்டின் உயரிய விருதான “நகடக் பெல் ஜி கோர்லோ” விருதை இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவுத்துள்ளது.

பூடான் நாட்டின் 114-வது தேசிய நாளான இன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.அந்த வகையில், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு,பூடான் அரசு அந்நாட்டின் மிக உயரிய விருதான் “நகடக் பெல் ஜி கோர்லோ” விருதை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக,பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் கூறியதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறுகையில்:

“மிக உயரிய சிவிலியன் விருதுக்கு மாண்புமிகு நரேந்திர மோடிஜியின் பெயர் அறிவிக்கப்பட்டதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

பல ஆண்டுகளாக மற்றும் குறிப்பாக தொற்றுநோய்களின் போது மோடிஜி நீட்டிக்கப்பட்ட அனைத்து நிபந்தனையற்ற நட்பையும் ஆதரவையும்  எடுத்துரைத்தார்.அவர் மிகவும் தகுதியானவர்,பூடான் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள். அனைத்து தொடர்புகளிலும், உன்னதமான, ஆன்மீக மனிதனாக மாண்புமிகு பிரதமர் மோடியை பார்த்தேன்.அவருக்கு விருது வழங்கும் கவுரவத்தை நேரில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளது.

unknown node