"நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும்"- ராகுல்காந்தி வேண்டுகோள்..!

As the spread of corona increases, a complete curfew should be imposed across the country" - Rahul Gandhi's request ..!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையானது 3.5  லட்சத்தை தாண்டியுள்ளது.இதனால்,பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகையில் ஊடரங்கு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று கருத்து கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி,”நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுபடுத்த முடியாத அளவுக்கு தீவிரமடைந்துள்ளது.ஆனால் இதற்கு மத்திய அரசு, உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

எனவே,கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும்,இதுவே சரியான தீர்வாகும்”, என்று கூறியுள்ளார்.

மேலும்,ஏழை மக்களுக்கு குறைந்த பட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து,அதன்பின்னர் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.