கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சயோனி கோஷுக்கு ஜாமீன் .....!

Arrested Trinamool Congress leader Sayoni Ghosh has been granted bail.

கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சயோனி கோஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மேற்கு வங்க தலைவர் சயனி கோஷ் அவர்கள் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.

அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடி மிரட்டும் தோணியில் பேசியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சயனி கோஷுக்கு தற்பொழுது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான குணால் கோஷ், சயோனி கோஷுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் நன்றி தெரிவித்து கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

unknown node