பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

AIADMK district secretaries' consultation meeting has started at the party headquarters in chennai rayapet.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின்  தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்  மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும்  என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சசிகலா விடுதலை குறித்து விவாதிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்துக்கு பிறகு ஆலோசனை நடத்தப்படவுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.