விவாதமின்றி விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் பிரதமர் மோடியை சாடியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே இந்த விவசாய சட்டம் மூன்றும் விவாதங்களின்றி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யும் பொழுது விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் பி சிதம்பரம் அவர்கள், விவாதம் இன்றி விவசாய சட்டம் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்னதாக பிரதமர் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விவாதிப்பதற்கு முன் வந்தார். ஆனால் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் விவாதம் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது என அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு ,
unknown node