பாகிஸ்தானில் டெலிவரி செய்யும் நபர் ஒருவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த திருடர்கள் டெலிவரி செய்யும் நபர் கண்ணீர் விட்டு அழுததும் மனம் திறந்து பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்துள்ள திருடர்கள்.
பாகிஸ்தானில் கராச்சி என்ற இடத்தில் டெலிவரி செய்யும் நபர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு வீட்டில் டெலிவரி செய்து விட்டு திரும்பும் பொழுது இரு சக்கரவாகனத்தில் 2 திருடர்கள் டெலிவரி செய்யும் நபர் பக்கத்தில் வந்து தனது வாகனத்தை நிறுத்தினர், அதில் ஒருவர் வாகனத்தில் இருக்க மற்றொருவர் முகத்தை கைகுட்டையால் மறைத்துக்கொண்டு டெலிவரி செய்யும் நபரிடம் கத்தியை காட்டி உன்னிடம் இருக்கும் உன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடு என்று மிரட்டுகிறார்.
மேலும் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த டெலிவரி செய்யும் நபர் தன்னிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும் கொடுத்து விட்டு தான் மிகவும் கஷ்டப்படுவதாக அழுகிறார், மேலும் இதனால் திடீரென மனம் மாறிய அந்த வழிப்பறி திருடர்கள் அவரிடமிருந்து வாங்கிய பொருட்களை அந்த டெலிவரி செய்யும் நபரிடம் கொடுத்துவிட்டு கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளார், மேலும் இதற்கான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown node