ரூ.13,000 கோடி வங்கி மோசடி: லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு மீண்டும் ஜாமீன் வழங்க  மறுப்பு

Default Image
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் ,அவரது  நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி  விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
இந்த மோசடி தொடர்பாக  நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது.
அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய  வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தது.
இந்நிலையில்  4வது முறையாக ஜாமீன் வழங்க கோரி நீரவ் மோடி தரப்பில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அதை விசாரித்த லண்டன் நீதிமன்றம்,சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு மீண்டும் ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவித்துவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்