இரக்கத்திற்கு இலக்கணம் இவர்தானோ? துபாய் இளவரசரின் அட்டகாசமான செயல்!

துபாய் இளவரசரின் இரக்கமிக்க செயல்.

துபாய் இளவரசரின் இரக்கமிக்க செயல்.

துபாயின் பட்டத்து இளவரசராகவும், நிர்வாக கவுன்சில் தலைவருமாக விளங்கி வருபவர் மேதகு ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம். இவர் உயிரினங்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இதற்காகவே, தனி மிருககாட்சிசாலை போன்ற இடத்தில் பல்வேறு விலங்குகளை மிக பாசமாக வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காலங்களில் பட்டத்து இளவரசர் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்த நிலையில், அவரது வாகனங்களில் பல பயன்படுத்தப்படாமலே இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடஸ் வாகனத்தின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடுக்கட்டி முட்டையிட்டு அடைகாத்து வந்தது.

unknown node

இதனை பார்த்த இளவரசர், அந்த வாகனத்தை பயன்படுத்தலாம், பறவைகள் வாழ்வதற்கான வாழ்விடமாகவே அதை கொடுத்துவிட்டார்.