அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

Default Image

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு.

மத்திய பிரான்சில் லியோன் நகர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 160 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் கொண்டு தீயை அணைத்தன.

தீ விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர், 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 10 பேர் லேசான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறுகையில், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் 3 முதல் 15 வயதுடையவர்கள் என்று கூறினார். விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்