இன்று மகளிர் உரிமை தொகை… போனை செக் பண்ணிக்கோங்க..!

கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி  காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு புதிதாக 7,35,000 பயனாளிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று காலை தொடங்கி வைக்கும் முதல்வர்.!

இதனால் நவம்பர் மாதம் முதல் 1 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கலைஞர் உரிமை தொகை பெற்று வந்த  நிலையில் மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு கொடுத்தனர். இந்த மாதம் முதல் மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாதம் முதல் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக மகளிர் உரிமை தொகையை மாதம் மாதம் 15-ம் தேதியில் வங்கியில் செலுத்தத்தப்பட்டு வருகிறது.  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கல் முன்னிட்டு இந்த மாதம் ஜனவரி 10-ஆம் தேதி  அதாவது (இன்று) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் வங்கி கணக்கில் வந்து  சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay