#BREAKING :தமிழ்நாட்டில் மீண்டும் பெண் சிசுக்கொலை.! தாய், பாட்டி கைது!

Default Image

தேனீ மாவட்டம் அண்டிபட்டி அருகே உள்ள ராமநாதபுரம்  கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் ,கவிதா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த மாதம் 3-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த பெண் குழந்தை பிறந்த நான்கு ,ஐ ந்து நாள்களில் வயிற்று வலியால் குழந்தை உயிரிழந்ததாக கூறி வீட்டின் அருகே புதைக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் நடத்திய விசாரணையில் போலீசார் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 3-வதும் பெண் குழந்தை என்பதால் எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததை தாய் ஒப்புக்கொண்டார்.

மாமியார் தூண்டுதலின் பேரில் பெண் குழந்தையை கொன்றதாக தாய் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்தார் .இந்த வாக்குமூலம் அடிப்படையில் தாய், பாட்டி ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். அண்மையில் உசிலம்பட்டி அருகே பெண் சிசுக்கொலை நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண் சிசுக்கொலை நடந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்