விருதுநகர் பாலியல் வன்கொடுமை-செல்போன்கள் ஆய்வு..!

Default Image

விருதுநகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கைதானவர்களில் 4 பேரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஹரிஹரன் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கைதானவர்களில் 4 பேரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. செல்போன்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்து சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்