வேளாங்கண்ணி தேவாலய திருவிழா..! பக்தர்களுக்கு அனுமதி இல்லை…! – நாகை ஆட்சியர்

Default Image

ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கவுள்ள வேளாங்கண்ணி திருவிழாவில், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. 

நாகையில் வேளாங்கண்ணி திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவிற்கு மற்ற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்துகொள்ள மக்கள் வருவதுண்டு.

அந்த வகையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி திருவிழா தொடங்கவுள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக திருவிழாவில் பக்கதர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக திருவிழாவை  கண்டுபிடிக்குமாறும், பாதை யாத்திரையாக செல்லும் பக்கதர்கள் சொந்த ஊருக்கு செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI
Sardar2