சிந்தாதிரிப்பேட்டையில் நள்ளிரவில் இரு சக்கர வாகனம் திருட்டு…!!

Default Image

சென்னையில், நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிந்தாதிரிப்பேட்டையில் நள்ளிரவு நேரத்தில், பட்டாக் கத்தியுடன் இருவர் சுற்றித்திரிந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றை திருட அவர்கள் நோட்டமிடுகின்றனர். வாகனத்தை எடுக்க வெகுநேரம் முயலும் அவர்கள், கடைசியில், பட்டா கத்தியைக் கொண்டு இரு சக்கர வாகனத்தின் லாக்கரை உடைக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் மர்ம நபர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்