#TodayPrice:சதத்தை விட்டு பெட்ரோல்,டீசல் விலை குறையுமா? – வாகன ஓட்டிகள் கவலை!

Default Image

பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில்,சென்னையில் இன்று 20-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • அதே சமயம்,டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.105.41 மற்றும் டீசல் ரூ.96.67-க்கும் விற்பனை.
  • மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.120.51 மற்றும் டீசல் ரூ.104.77-க்கும் விற்பனை.
  • கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.115.12 மற்றும் டீசல் ரூ.99.83-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

எனினும்,பெட்ரோல்,டீசல் ரூ.100-ஐ விட்டு குறைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.எனவே, பெட்ரோல் டீசல் விலை சதத்தை விட்டு பெருமளவில் குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பெரும் விருப்பமாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்