#Breaking: வாக்குபதிவை நிறுத்திய தோப்பு வெங்கடாச்சலம்.. பூத் முன் அமர்ந்து தர்ணா!

ஈரோடு பெருந்துறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைத்ததாக புகாரளித்த தோப்பு வெங்கடாச்சலம், வாக்குபதிவை நிறுத்தி, பூத் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.
தமிழகம் முழுவதும் மக்கள் சிரமமின்று வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு பெருந்துறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைத்ததாக சுயேச்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் புகாரளித்தார். மேலும் அவர், வாக்குபதிவை நிறுத்தி, பூத் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025