வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் 24 வருடங்களுக்கு பின் கைது.!

Default Image
  •  கடந்த 1996-ம் ஆண்டு சுரக்குடி பகுதியை சார்ந்த சுதாகர் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
  • கேரளா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த சுதாகரை கைது செய்து காரைக்கால் கொண்டு வந்தனர்.

கடந்த 1996-ம் ஆண்டு திருநள்ளாறு சுரக்குடி பகுதியை சார்ந்த சுதாகர் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

இதனால் சுதாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து நிலையில் சுதாகர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 24 ஆண்டுகளுக்கு  முன் தலைமறைவாகிவிட்டார்.

இதையெடுத்து  காரைக்கால் மாவட்ட நீதிமன்றம்  சுதாகரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை கைது செய்யுமாறு போலிசாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் சுதாகர் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதையடுத்து கேரளாவிற்கு விரைந்து சென்ற போலீசார் பத்தனம் திட்டா பகுதியில் தலைமறைவாக இருந்த சுதாகரை கைது செய்து காரைக்கால் கொண்டு வந்தனர்.

அவர்கள் காரைக்கால் மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்