பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை அளித்த முதலமைச்சர்.!

Default Image
  • பாடி பில்டர் பாஸ்கரனுக்கு சமீபத்தில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
  • பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம்  ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வழங்கிகினார். 

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும்  விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது.அந்த வகையில்  தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இதன் பின்னர் அந்த விருதை பாடி பில்டர் பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். பின்னர் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை சிறப்பினமாக வழங்கப்படும் என்றும் 15% சதவீத தொகையான ரூ.3,75000 அவரது பயிற்சியரான அரசு என்பவருக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில்  அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம்  ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வழங்கிகினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்