வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

Default Image

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

இந்நிலையில்  வன்னியர்களுக்கு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ) 10.5% தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மற்றும்  சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  (MBC)  பிரிவில் வரும் மற்ற எல்லா சமூகங்களுக்கும் 2.5 % வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.MBC – V என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வழி வகை செய்கிறது.6 மாதங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்றும்  அப்போது இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்