ரேஷன் கடைகளில் கருப்பட்டி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- அண்ணாமலை.!

annamalai bjp panai

நடைப்பயணத்தின் போது பனைத்தொழிலாளர்களுடன் உரையாடிய அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள ‘என் மண் என் மக்கள்’ எனும் பாதயாத்திரை நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார்.

இன்று இந்த நடைபயணத்தின்போது அண்ணாமலை, ராமநாதபுரத்தில் உள்ள பனை தொழிலாளர்களுடன் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, பனை மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மதிப்புமிக்கவை, இதன் மூலமாக பனை தொழிலாளர்களின் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பனங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் கொண்டுவரவும், பனையிலிருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையிலும், கருப்பட்டி போன்ற இனிப்பு பொருட்களை ரேஷன் கடைகளிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அண்ணாமலை மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்