தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!

Necessary preventive measures have been taken in the Nilgiris, Coimbatore, Theni, and Tenkasi districts to prevent bird flu.

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உட்பட 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மருத்துவர், ஆய்வாளர், துப்புரவு பணியாளர்கள் கொண்ட அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதகாக கூறிய அவர், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.