1000-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளது இலங்கை கடற்படை.
மக்களவையில் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.அதில் இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியத்ததாக புகார் தெரிவித்துள்ளனர் மீனவர்கள்.
அதாவது நேற்று இரவு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் சுமார் 50 படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.அப்பொழுது வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர் மீனவர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025