முகிலன் குறித்து தகவல் கிடைத்துள்ளது – சிபிசிஐடி விளக்கம்!

Default Image

சமூக ஆர்வலர் முகிலன் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனை வெளியிட்டால் விசாரணை பாதிக்கப்படும் என்று சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் திடீரென காணாமல் போனார்.அவரை கண்டுபிடித்து தரக்கோரி  மனித உரிமை அலுவலர் ஹெண்ட்ரி திபேன் என்பவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
முகிலன் மாயமாகி 112 நாட்கள் ஆனா நிலையில் அவரது விசாரணை எந்த நிலையில் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து,உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டிருந்தனர். இந்நிலையில், இன்று ஆஜரான சிபிசிஐடி காவலர்கள் வழக்கு குறித்து முக்கியமான தகவல் ஓன்று கிடைத்துள்ளதாகவும் அதனை இப்போது வெளியிட்டால் விசாரணையானது பாதிக்கப்பட கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்