#BREAKING: சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி உடல்நலக் குறைவால் காலமானார்..!

Default Image

சமூக ஆர்வலரும், பழங்குடிகளுக்காக குரல் கொடுத்த ஸ்டான் சுவாமி உடல்நலக் குறைவால் காலமானார்.

எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த  ஸ்டான் ஸ்வாமிக்கு உடல்நிலை குறைவால் உயிழந்தார். சிறையில் இருந்த ஸ்டான் ஸ்வாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, உரிய சிகிக்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், ஸ்டான் ஸ்வாமி உயிரிழந்தார்.

பார்க்கின்சன் நோய் இருந்ததால் தண்ணீர் கூட அருந்த முடியாமல் ஸ்டான் ஸ்வாமி இருந்தார் எனவும் சிறையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. உடல் நிலை கருதி ஜாமினும் வழங்காமல், உரிய சிகிச்சையும் அளிக்காமல் இருந்ததால் தான் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்