#Breaking:எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு – சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி நீராவி முருகன்!

Default Image

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியிருந்தது.

வழிப்பறி,கொள்ளை வழக்கு:

தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக,திண்டுக்கல் மாவட்டத்தில் அவர்மீது வழிப்பறி,கொள்ளை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

தப்ப முயற்சி:

இதனையடுத்து,அவரை கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட எஸ்.ஐ இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் நெல்லையில் முயற்சித்தபோது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்றதால் இந்த என்கவுண்டர் நடந்ததாகவும்,மாறாக திட்டமிட்டு இது நடத்தப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு:

இந்நிலையில்,நீராவி முருகனை பிடிக்க சென்றபோது பழனி எஸ்.ஐ இசக்கிராஜா உட்பட 3 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாகநெல்லை எஸ்.பி சரவணன் கூறுகையில்:நீராவி முருகனை பிடிக்க திண்டுக்கல் மாவட்டம் தனிப்படை போலீசார் நெல்லை சென்றிருந்தனர்.இந்த நிலையில்,நீராவி முருகனை பிடிக்க முயன்றபோது அவர் அரிவாளால் 3 காவலர்களை  தாக்கியதன் காரணமாக,தற்காப்புக்காக முருகனை ஒரு முறை சுட்டதாகவும்,ரவுடி முருகன் தாக்கியதில் நான்கு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நீராவி முருகன் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்