இன்று முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு…!

Default Image

இன்று 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டுமென கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிற நிலையில், இன்று 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டுமென கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்