எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது.! மருத்துவமனை நிர்வாகம்.!

Default Image

இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பாலசுப்பிரமணியனின் உடல் நிலை சீராக உள்ளது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவி தேவைப்படுவதால் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். பி. பிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் மூலம் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில்  கூறப்பட்டுள்ளது.

நேற்று பாலசுப்பிரமணியன் மகன் சரண் வெளியிட்ட வீடீயோவில் கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது என தெரிவித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்