சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!

Default Image

தந்தை, மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்குப்பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்து உள்ளனர்.

இதனால், பென்னிக்ஸ், ஜெயராஜ் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் உட்பட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தந்தை, மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தியதாகவும், இருவரும் உயிரிழந்த நிலையில் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை மகன் மீது பொய் வழக்கை பதிவு செய்ததாகவும் சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில்  சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்