திருச்சியில் மீண்டும் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் ! பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை

Default Image

திருச்சியில் உள்ள பெல் ஆலை வளாகத்தில் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரி கடையின் சுவற்றை துளையிட்டு 28 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததுதான்.இதற்கு முன்னதாக பஞ்சாப் நேசஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது இந்த சம்பவங்களை போல திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தின் கூட்டுறவு வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது.
திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் பெல் தொழிற்சாலை அமைந்துள்ளது.இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆலையின் வளாகத்திலேயே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியாக குடியிருப்புகளும் உள்ளது. பெல் நிறுவனத்தின் கூட்டுறவு வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.1.5 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்