அத்திவரதரை தரிசித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Default Image

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒரு முறை அத்திவரதர் தரிசனம் நடைபெரும். இதற்கு முன்னர் கடந்த 1979 ம் ஆண்டு அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. அதன் பின் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தரிசனத்திற்கு நாள் தோறும் லட்சக்கணக்கானோர் வரும் நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று அத்திவரதரை தரிசிக்க  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் காஞ்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்த அவர் அத்திவரதரை தரிசனம் செய்தார்.குடியரசுத் தலைவர் வருகையால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்