வடகலை – தென்கலை இடையே மோதல்…!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் கோவிலிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார். சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை, தென்கலை சார்ந்தவர்கள்  “திவ்ய பிரபஞ்சம்” படுவது வழக்கம்.   இதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக யார் முதலில் திவ்ய பிரபஞ்சம் பாடுவது என்ற பிரச்னை உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டு காலமாக … Read more

ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

orange alert

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், … Read more

#Breaking : காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அரைநாள் விடுமுறை.! பள்ளிகளுக்கு மட்டும்.!

தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை. – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! இந்தந்த பகுதிகளுக்கு மட்டும் தான்!

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றம்.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதால் பெரும்பாலான வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. அதன் முழு கொள்ளளவான 24 அடியில் , 20 அடியை தூண்டியுள்ளது. 2,695 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் மழை … Read more

காஞ்சிபுரம் அரசு பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து.! 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி.!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, சாலவாக்கம் பகுதியில் அரசு பேருந்து மீது கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், படூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளது. அப்போது சாலவாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் கல்குவாரியில் இருந்து வந்த கனரக லாரி பக்கவாட்டு பகுதியில் மோதியுள்ளது. இதில், லாரியில் இருந்த பக்கவாட்டு தகரம் மோதியதில் பேருந்தில் பயணித்த ரதி … Read more

அதிகனமழை எச்சரிக்கை.! காஞ்சிபுரம் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.!

நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எனப்படும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் … Read more

#BREAKING: கேஸ் கிடங்கில் தீ விபத்து – உயிரிழப்பு 8-ஆக உயர்வு!

காஞ்சிபுரத்தில் கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக உயர்வு. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. தேவரியப்பாக்கத்தில் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயம் அடைந்து சென்னை, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 7 பேர் உயிரிழந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஞ்சிபுரம் … Read more

#BREAKING: சிறுமி டான்யா டிஸ்சார்ஜ்…படிப்பு செலவை அரசே ஏற்கும் – அமைச்சர் நாசர்

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ். அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா, தண்டலம் தனியார் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு சென்று சிறுமியை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நாசர், முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார். சிறுமி டான்யா குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரிசீலினை … Read more

#JustNow: செஸ் ஒலிம்பியாட் – 4 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை!

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை  நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு … Read more