சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – TNEA அறிவிப்பு

Default Image

பொறியியல் படிப்புகளில் சேர சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு என அறிவிப்பு

B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்கள் யாரேனும், இதுவரை நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காவிட்டால் வரும் 12-ம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என்று TNEA (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை) அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர பள்ளிகள் வாயிலாகவும், சிறப்பு மையங்கள் மூலமாகவும் கடந்த 27ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதன்பின், பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 1-ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 2042 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், விளையாட்டு வீரர்கள் யாரேனும், இதுவரை நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காவிட்டால் வரும் 12-ம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்