ரெட் அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ?

Default Image

கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது,இதன்  காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளில் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,ராணிப்பேட்டை, தஞ்சாவூர்,திருவாரூர்,மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்