ஸ்ட்ரைக் வாபஸ் ! தனியார் தண்ணீர் லாரிகள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு

Default Image

தமிழகம் முழுவதும் நாளை முதல் நடைபெற இருந்த தனியார்  தண்ணீர் லாரிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தனியார் தண்ணீர் லாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 25,000 தனியார் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. அதில், சென்னையில் மட்டும் தினமும் 5,000 லாரிகள் இயங்குகிறது. இந்த நிலையில், கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு தண்ணீர் கிடைக்கும் இடங்களிலும் பொதுமக்கள் தண்ணீர் எடுக்க விடாமல் பிரச்சனை செய்வதாவும் கூறி நாளை முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில், தண்ணீர் எடுக்க அனுமதி தருவதாகவும், தண்ணீர் லாரியில் செல்லும் ஓட்டுனர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, நாளை நடைபெற இருந்த போராட்ட அறிவிப்பானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்