தமிழன்னா சும்மாவா ..! ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் பிரித்விராஜ் தொண்டைமான்..!

Prithviraj Tondaiman

ஒலிம்பிக் போட்டி: ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீரர் தேர்வாகி உள்ளார்.

இந்த ஆண்டில் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ்ஸில் உள்ள பாரிஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டது வருகின்றனர்.

அதன்படி துப்பாக்கி சுடுதலில் போட்டியில், ஷாட் கன் பிரிவில்  தமிழகத்தை சேர்த்த வீரரான ப்ரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுருக்கிறார். இவர் இந்தியாவிற்காக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல தொடர்களில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் கூட  பங்குபெற்று தங்கப்பதக்கம் வென்று இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இந்த சூழலில் தற்போது இவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்