கர்ப்பிணி உயிரிழப்பு – மருத்துவர்கள் உட்பட 3 பேர் கைது..!

arrested

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதி வீரமணி – ரமணா. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், 7 மாத  கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது குழந்தை வேண்டாமென முடிவெடுத்து, அந்த குழந்தையை கலைக்க முடிவெடுத்துள்ளார்.

இதனையடுத்து அவர் கருவை கலைக்க இ மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார.

மாத்திரை சாப்பிட்டபின் அவரது கருவில் வளர்ந்த சிசு உயிரிழந்ததை எடுத்து தீவிர சிகிச்சைக்குப்பின் அவரது கருவிலிருந்து குழந்தை அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்தும் அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்த காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் மருத்துவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு மாத கருவை கலைக்க மாத்திரை கொடுத்த மருத்துவர் தேன்மொழி, சக்தி தேவி, வெற்றி செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்