தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை

Default Image

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் , சினிமா மற்றும் விளையாடு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் பிற்பகல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்  திருவள்ளூர் மாவட்டம் தாமரைப் பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்.பி.பி-யின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  தாமரை குளத்தில் உள்ள எஸ்.பி.பியின் பண்ணை வீட்டில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம்  எஸ்.பி பாலசுப்ரமணியம்  உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்